
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வருகின்ற ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவர்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து சாதனை வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய குடிமைப்பணிகள் தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான முடிவுகளை (22.04.2025) வெளியிட்டுள்ளது. இதில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் படித்த எஸ்.சங்கர் பாண்டியராஜ் மற்றும் ஆர்.தமிழரசி ஆகியோர் அகில இந்திய அளவில் முறையே 807 மற்றும் 861 வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.



குறிப்பாக,இருவரும் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து குடிமைப் பணித் தேர்வில் சாதனை வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் முக்கியமாக சங்கர் பாண்டியராஜ் தமிழ் விருப்பப்பாடம் , தமிழ் வழியிலேயே தேர்வு எழுதியதோடு நேர்முகத்தேர்வினையும் தமிழிலேயே எதிர் கொண்டு இந்த வெற்றியினைப் பெற்றுள்ளார்.
தமிழ் விருப்பாடத்தை தேர்வு செய்து அதன் மூலம் இந்திய குடிமைப்பணியில் வெற்றி பெற்றுள்ள இவர்களுக்கு பாராட்டுக்கள்.